இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பல அற்புதமான விஷயங்கள் வெளிவருவதோடு, நமது முன்னோர்களுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இத்தகைய அறிவியல் சாதனைகளை எப்படி செய்தார்கள் என்று நம்மை வியக்க வைக்கிறது. அந்த வரிசையில் இன்று பலராமன் உடைய கருவானது தன் தாய் வயிற்றிலிருந்து வேறொரு பெண்ணின் வயிற்றுக்கு மாற்றப்பட்ட விஷயத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். […]Read More
பகுத்தறிவு பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும், வேதங்களிலும் கூறப்பட்டு இருக்கக்கூடிய கருத்துக்களின் உண்மை நிலை தெரியாது பலரும் பல விதமாக பிதட்டி வருகிறார்கள். அந்த வகையில் சோம பானம் என்பது போதைப் பொருளுக்கு ஈடானது தற்போது இருக்கும் விஸ்கி, ஒயின் போன்று மனிதர்களுக்கு போதை ஊட்டக்கூடிய பொருள் என்று ஆங்கிலேயன் திரித்துக் கூறி விட்டதை நம்பி தான் நாம் இன்றும் சிக்கல் சிக்கித் தவிக்கிறோம். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் […]Read More
ஆடிப்பெருக்கு திருவிழாவானது தமிழகம் எங்கும் சிறப்பான முறையில் கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாக விளங்குகிறது. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களின் மங்களகரமான பண்டிகையான இதனை ஆரம்ப நாட்களில் ஆதிப்பெருக்கு என்று அழைத்திருக்கிறார்கள். நாளை காவிரியில் 18 படிகளும் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காவிரி அன்னைக்கு நன்றியை தெரிவிக்க கூடிய வகையில் நமது முன்னோர்கள் இந்த ஆடி 18 – ஐ கொண்டாடியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆடிப் பதினெட்டின் சிறப்பு என்ன என்பதை பற்றி பார்க்கையில் மனித குலத்திற்கு இயற்கை […]Read More
உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகின்ற நம் தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய நூல்களை நமது முன்னோர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள். இதில் ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் திருநங்கைகள் பற்றிய குறிப்புக்களை இளங்கோவடிகள் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்தத் திருநங்கைகள் அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் இவர்களை ஆண்மை திரிந்த […]Read More
கல்தோன்றி மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று மார்தட்டி கொள்ளக்கூடிய தமிழ் இனமே, சங்க கால தமிழ் நூல்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் கூற்றுக்களை நீ உணர்ந்து கொண்டால் உலகிலேயே தலைசிறந்த விஷயங்கள் அனைத்தையும் கூறியவன் நம் பாட்டனுக்கு, பாட்டன் என்பது அனைவருக்கும் தெளிவாகும். இன்று விஞ்ஞானம் வளர்ந்து தொழில்நுட்பங்கள் பெருகி இருந்த காலத்தில் கண்டுபிடிப்புகள் பல்கி பெருகி வருவது பெரிய விஷயமே இல்லை. ஆனால் எத்தகைய தொழில்நுட்பமும் வளராத காலத்தில், […]Read More
இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு வகையான நாகரீகங்கள் தழைத்து ஓங்கி மனித நாகரீகத்தில் நம்மை திளைக்க வைத்துள்ளது. அந்த வகையில் மிகப் பழமையான நாகரீகமாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், ரோமன் நாகரிகம் போன்றவற்றை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக நாம் கூறலாம். இதைப் பற்றி விரிவாக கிப்பன் எழுதிய “ரோமப்பேரரசின் வீழ்ச்சியும் நலிவும்” என்ற நூலிலும்,பால் கென்னடி எழுதிய “பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நூல்களில் படிக்கும் போது […]Read More
ராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் இல்லாத விஷயங்களில் இல்லை, என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு மனிதனும் நல்வழியில் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்த கூடிய வகையில் இந்த இரண்டு காவியங்களில் கதைகளும் இருக்கும். இதில் மகாபாரதத்தை பொருத்தவரை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை சுற்றி தான் கதை நகரும். இந்தக் கதையில் கௌரவர்களை பெற்றெடுத்த காந்தாரி பற்றியும், அவள் கடவுள் கண்ணனுக்கு அளித்த சாபத்தால் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக இந்த […]Read More
விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விபரம் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது வேத காலத்திலும், இதிகாச காலத்திலும் இதுபோன்ற விமானங்கள் பயன்பாட்டில் இருந்தது என்று சொன்னால் அது உங்களுக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை தான். ஆனால் உண்மையில் இதுபோன்ற விமானங்கள் அன்றைய மன்னர்களாலும், கடவுள்களாலும் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் மட்டும் அல்லாமல் அவற்றை வடிவமைத்த […]Read More
சங்க கால நூல்களின் தொகுப்பில் இருக்கும், எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக கருதப்படும் அகநானூறினை சுமார் 144 புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இந்த நூலைத் தொகுத்து வழங்கியவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனான உருத்திரசன்மர். இந்த முழு நூலையும் தொகுப்பித்த மன்னர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். சுமார் 400 பாடல்கள் கொண்ட இந்த நூலானது அகத்திணையை சார்ந்தது. அகம்+நான்கு+நூறு என்பதுதான் அகநானூறு என்றானது. இந்த அகநானூறை அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும் பாட்டு, பெருந்தொகை […]Read More
ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு மௌரிய பேரரசில் அசோகர் இந்தியாவின் பெரும் பகுதியான வடபகுதியை மட்டுமல்லாமல் இன்று இருக்கும் பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ் போன்ற பல பகுதியையும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்திருக்கிறார். இவரது ஆட்சி காலத்தில் அசோகரை எவராலும் வெல்ல முடியவில்லை என்று கூறலாம். இது மட்டுமல்லாமல் அசோகரின் போர்படையைப் பற்றி சொல்லும் போது வீரம் மிக்க படை என்று கூறலாம். அதோடு ஆக்ரோஷமாக போரிடக்கூடிய படை வீரர்கள் இவரது படையில் இருந்தது. இவருக்கு […]Read More