இலங்கையில் இது வரை யாரும் இந்த அளவு அரசாட்சி செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு இராவணன் படு நேர்த்தியான முறையில் ஆட்சி செய்ததோடு மக்களை செல்வ செழிப்பில் வைத்திருந்தான். இலங்கையை ஆண்ட நாகர் இனத்தைச் சேர்ந்த கைகைசிக்கும், ஏகர் இனத்தைச் சேர்ந்த வஜ்ரவாக்கும் பிறந்தவன் தான் இந்த இராவணன். இவனுடன் பிறந்தவர்கள் கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். மிகச் சிறந்த சிவபக்தனான இராவணனை அரக்கன் என்று சிலர் முத்திரை குத்தி இருக்கிறார்கள். ஆனால் இராவணனை கடவுளாக […]Read More
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழக்கூடிய வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த நூலின் ஆசிரியர் யார் என்றும், இந்த நூல் இயற்றப்பட்ட ஆண்டு எது என்றும், கதையின் தலைவன் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் இந்த நூலில் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளது. அவற்றில் 66 பாடல்கள் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வளையாபதியில் கதை இது […]Read More
மங்களகரமான பொருளாக கருதப்படும் மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு அதிக அளவு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக சடங்குகள், சம்பிரதாயங்கள், விசேஷ நாட்களில் இதுபோன்று பெண்களுக்கு மருதாணியை வைத்ததின் ரகசியம் என்ன என்று தெரியுமா? மருதாணியை வைக்கும் போது கைகள் சிவப்பாக மாறுவதால் பார்க்க அழகாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழவில்லை. அதில் நம் முன்னோர்களின் அறிவு புதைந்து கிடக்கிறது. அட .. அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் உங்களுக்குள் யூகிப்பது […]Read More
இன்று உள்ள காலகட்டத்தில் மனிதன் வாழ்க்கையில் சிறப்பாகவும், மன அமைதியோடும் வாழ்வதற்கு மூன்று விஷயங்கள் அவசியம் தேவை என்று கூறலாம். அந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயமாக இன்பமயமாக மாறிவிடும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் பழையதை அனைத்தையும் நீங்கள் மறந்து விட வேண்டும். அப்படி மறந்த பிறகு நடக்கின்ற நிகழ்காலம் பற்றி கவனமாக நீங்கள் நடக்க வேண்டும். மேலும் வரப்போகும், எதிர்காலத்தை நல்ல முறையில் சிந்தித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும். […]Read More
வெள்ளையனையே நடுங்க வைத்த புலி திப்பு சுல்தான் தனது சாதுரியமான போரிடும் திறமையால் அனைவராலும் புகழப்பட்ட இவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த கோட்டையில் ஆறு புலிகளை உண்மையாக வளர்த்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் திப்புவின் அரியணையில் புலியின் சிலை ஒன்று கர்ஜித்துக் கொண்டே இருக்கும் படி வடிவமைக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வாளின் கை பிடி பகுதிகளில் புலி உறும்பும் வண்ணம் அதன் தலை செதுக்கப்பட்டுள்ளது. எனவே தான் என்னவோ வெள்ளையன் திப்பு சுல்தானை “மைசூர் புலி” என்ற […]Read More
“என்ன வளம் இல்லை இந்த நாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப இந்தியாவின் செல்வங்களின் மீது கொள்ளை ஆசை கொண்டு கொள்ளை அடிப்பதற்காக பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தாக்க படையெடுத்து வந்தவன் தான் கஜினி முகமது. ஆசிய கண்டத்தையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கிபி ஆயிரம் முதல் 1027 வரை இந்தியாவின் மீது தொடர்ந்து 17 முறை போர் தொடுத்து 18 வது […]Read More
மனிதர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன் மூலம் பல வியத்தகு விஷயங்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கும். அந்த வகையில் கொந்தகை என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் பல அரிய விஷயங்கள் வெளி வந்துள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கொந்தகை என்ற ஊரில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்த ஆய்வில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 5 அடி உயரம் […]Read More
இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் மற்றொரு அங்கமான மணிமேகலை மிகவும் சிறப்பான காப்பியம் என்று கூறலாம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இதனை சீத்தலைச் சாத்தனார் இயற்றி இருக்கிறார். இதனை இரட்டைக்காப்பியம் என அழைக்க காரணம் சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணிமேகலை துறவறத்தையும் விளக்குவதால் தான். இந்த காப்பியத்தில் காப்பிய தலைவி மணிமேகலை பற்றிய அபரிமிதமான தகவல்கள் உள்ளதால் தான் இந் நூலானது மணிமேகலை என்று அழைக்கப்பட்டது. தமிழில் தோன்றிய நூல்களிலேயே முதல் சமணக் காப்பியம் என்று […]Read More
நெடுங்காலமாகவே கடற்கன்னி பற்றி பல்வேறு விதமான விஷயங்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த கடல் கன்னிகள் உண்மையில் இருக்கிறார்களா என்றால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. எனினும் பலரது நம்பிக்கைகள் காரணமாக கடல் கன்னி பற்றிய கதைகள் சமுதாயத்தில் பல்கிப் பெருகி உள்ளது. மேலும் சில சமயங்களில் இந்த கடற்கன்னியை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அதற்காக அவர்கள் பூஜையும் செய்கிறார்கள். இந்த கடற்கன்னிகளின் உருவ அமைப்பு தான் அதிசயிக்கத்தக்கப்படி உள்ளது. உடலின் மேல் […]Read More
இந்து சமயத்தை அதிகமாக கொண்ட இந்தியாவில் இருக்கும் கோயில்களில் சில கோயில்களில் மர்மங்கள் புதைந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்த மர்மங்கள் நிறைந்த கோவில்கள் என்னென்ன அவை எங்கு உள்ளது என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம். தமிழகத்தில் மதுரையின் மையப் பகுதியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு மர்மமான கோவிலாக கூறி வருகிறார்கள். கோயில் வளாகத்தில் நுழைந்தாலே தெய்வீகத் தன்மை இருக்கும். எனினும் இந்த […]Read More