• October 19, 2024

கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் பற்றிய ரகசியம்..! – மெய்யாலுமா?

சிறு வயதில் நாம் படித்த புத்தகங்களில் கூடுவிட்டு கூடு பாயக்கூடிய மந்திரவாதிகள் பற்றிய விஷயங்களை படித்து நமக்குள் ஒரு வித பயம் கலந்த பிரம்மிப்பு ஏற்பட்டிருக்கும்.   அதுமட்டுமல்லாமல் விட்டலாச்சாரியார் படத்தில் ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து மற்றொரு உயிருக்குள் நுழைந்து பண்ணும் அட்டகாசங்களை பார்த்து நாம் ஏற்கனவே பயந்து இருப்போம். இதுபோன்ற கூடு விட்டு கூடு பாயும் வித்தையை சித்தர்கள் செய்திருக்கிறார்களா என்று நாம் எண்ணும்போது அது வியப்பாகவே உள்ளது.   மிகச்சிறந்த சித்தர்களின் […]Read More

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் வெற்றி மாலைகள் வேண்டுமா? – இனி இத

ஒருவன் வாழ்க்கையில் வெற்றிகளை அடைய அவனது நம்பிக்கை, அதுவும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கையோடு முயற்சியும் இணைந்து விட்டால் அவனது வெற்றியை எவரும் தடை செய்ய முடியாது.   இதனைத் தான், எத்தகைய கைகள் என்னை தள்ளி விட்டாலும் உன் நம்பிக்கை ஒன்று இருந்தால் அது என்றுமே உன்னை கைவிடாது என்று கூறி இருக்கிறார்கள்.   எத்தகைய மனிதனாலும் ஒரு வெற்றி இலக்கை அவ்வளவு சாதாரணமாக எட்டிப் பிடிக்க முடியாது. அந்த இலக்குகளை அடைய பல்வகையான கஷ்டங்களை […]Read More

“மரணத்தை மட்டுமே பரிசாக தரும் தீவு..! – மனிதர்களுக்கு நோ என்ட்ரி போட்ட

எவ்வளவுதான் உலகில் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், இன்னும் தீர்க்க முடியாத மர்மம் நிறைந்த முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.   அந்த வரிசையில் சுமார் 1.60 லட்சம் மக்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நிலையில் இன்று அங்கு ஆவியாய் உலாவுவதால், எந்த மனிதர்களும் அந்தப் பகுதிக்குச் சென்றால் உயிருடன் திரும்ப வர முடியவில்லை என்பதால் டூரிஸ்ட் களுக்கு அரசு அத்தீவுக்கு செல்ல தடை விதித்துள்ளது. இந்த விஷயம் கேட்டால் உங்களுக்கு திகில் கலந்த பயம் […]Read More

“காடுகளில் புதைந்திருக்கும் மாயா நகரம்..!” – விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..

மாயா நாகரிகம் என்பது  பண்டைய கால மத்திய அமெரிக்க நாகரிகம் என்று கூறலாம். தற்போது இது மெக்சிகோ, குவாத்தமாலா,ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் வரை பரவியுள்ளது.   இந்த மாய இனத்தவர்கள் கணிதம், எழுத்து, வானவியல் போன்ற துறைகளில் விசாலமான அறிவினை பெற்றிருந்தார்கள். இவரது கட்டிடக்கலை போற்றுதற்கு உரிய வண்ணம் இருந்துள்ளதாக பல அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இனத்தின் பொற்காலம் என்பது கிபி 150 காலகட்டத்தில் மிகவும் உச்சத்தை அடைந்து பிறகு படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து […]Read More

அடடா படிக்கும் போதே நாவில் எச்சில் ஊரும்..! நெய்தல் நிலம் மக்களின் உணவுகள்..!

சங்க தமிழர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து நிலத்தை ஐந்து வகை திணைகளாக பிரித்து அவற்றுக்குத் தக்க வகையில் சீரும் சிறப்புமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.   அந்த வகையில் இன்று நெய்தல் நிலத்தில் இருந்த மக்கள் என்னென்ன உணவினை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது பற்றிய சுவாரசியமான விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் நெய்தல் நிலம் என்பது பண்டைய தமிழகத்தில் கடலும், கடல் சார்ந்த இடங்களும் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள […]Read More

நாடி ஜோதிடம்.. அதனுள் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன?

நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிச் சென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். இதன் மூலம் ஆண்களின் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்களின் இடது கை கட்டை விரல் ரேகையை கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.    சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்திய, கௌசிகர், வைசியர், போகர், பிருகு, வசிஸ்டர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான […]Read More

காசு, பணம், மணி, துட்டு… பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…

ஒவ்வொரு நாளும் மனிதன் கடுமையாக உழைக்கின்றான் என்றால், அதற்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.   நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பணத்திற்கு இருப்பதோடு, பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்லும் சொல்லும் உண்மையாகவே உள்ளது. அப்படிப்பட்ட இந்த பணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.   இந்தியாவில் இன்று அதிக மதிப்புடைய […]Read More

“முயற்சி செய்து பார் தோழா..!” – உன் முயற்சியை திருவினையாக்கு..

வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார் தோழா.. கட்டாயம் உன் முயற்சி ஒரு காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிக்கும்.   நீங்கள் ஒன்றுக்காக முயற்சி செய்யும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் முயற்சியை கைவிடக்கூடாது. இதைத்தான் திருவள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று தனது குறளில் மிக அழகான முறையில் தெரிவித்திருக்கிறார்.   இதன் மூலம் உங்கள் முயற்சி, விடாமுயற்சியாக இருந்தால் எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும், நீங்கள் எளிதாக […]Read More

“தன்னைக் கொல்ல நினைத்த கணவனை கொன்ற பெண்” – அட அந்த கதை

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படும் குண்டலகேசியின் கதையை கேட்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். பௌத்த சமயத்தைச் சார்ந்த இந்த நூலை இயற்றியவர் நாதகுத்தனார்.   இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. எனினும் இதன் கதையை மேற்கோள் நூல்களின் மூலம் மிக நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. இக்கதையின் நாயகி பத்திரை என்ற பெண் இவள் காவிரிப்பூம்பட்டினம் பகுதியில் ஒரு செல்வந்தரின் மகளாக வளர்ந்து வந்தாள். இளம் வயதில் தாயை இழந்தவள் என்பதால் இவள் கேட்ட பொருட்களை எல்லாம் […]Read More

யவனர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், தமிழர்களுக்கும் என்ன தொடர்பு..!

சங்க காலத்திலிருந்து யவனர்கள், தமிழர்களோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்கான குறிப்புகள் சங்க கால நூல்களில் அதிகளவு காணப்படுகிறது.   இந்த யவனர்கள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர், பாரசீகர், அரேபியராக இருக்கலாம். இவர்கள் அனைவரையுமே யவனர் என்று சொல் கொண்டு அழைத்தார்கள். இவர்கள் அனைவருமே வாணிபம் செய்வதற்காக தமிழகத்தை நோக்கி வந்தவர்கள்.   இவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் கிடைத்த மிளகு, முத்துக்கள், சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம் போன்ற பொருட்களை […]Read More