• October 18, 2024

கொள்ளி வாய் பிசாசு உண்மையா? – அறிவியல் உணர்த்தும் உண்மை என்ன?

மனிதர்களின் மனதில் பேய்கள் பற்றி விதவிதமான எண்ணங்கள் எப்போதும் இருப்பது வாடிக்கைதான். அதிலும் கிராமப்புற பகுதிகளில் கொள்ளிவாய் பிசாசு பற்றி ஒரு பெரிய புராணமே உள்ளது என்று கூறலாம். சிறுவயதில் கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் குழந்தைகள் குறும்பு செய்யாமல் இருப்பதற்காக கொல்லிவாய் பிசாசுகள் பற்றி பல விதமான கதைகளை கூறி அவர்களிடையே பயத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்த கதைகளை கேட்ட சிறார்களும் இரவு முழுவதும் தூங்காமல் அந்த கொள்ளிவாய் பிசாசுகள் எங்கு இருக்கும்? என்ன செய்யும் […]Read More

நீங்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி வரலாறு தெரியுமா?

நம்மில் பலருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம் என கூறலாம். சுடச்சுட மணக்க மணக்க மசாலா வகைகளோடு செய்ய பாசுமதி அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு பலர் உயிரையே விட்டு விடுவார்கள்.  அந்நிய உணவான பிரியாணி எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதன் வரலாறு என்ன என்று பார்க்கலாமா? பிரியாணி பிறந்த இடம் பெர்சியா தற்போதைய ஈரான்.  பதினைந்தாம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மக்களுக்காக சமைக்கப்பட்ட உணவு […]Read More

அரைஞாண் கயிறு உணர்த்தும் அறிவியல் உண்மை என்ன? – இதில் இத்தனை விஷயம்

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டக்கூடிய பழக்கம் தொன்று தொட்டு இருக்கும் பழக்க வழக்கங்களில் ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை ஆன்மீகத்தோடு இணைத்து நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளது. அதை சீராக கடைபிடிக்கத் தான் இது போன்ற கருத்தை அவர்கள் கூறியிருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப அரை ஞாண் கயிறை வெள்ளி, தங்கம் போன்றவற்றில் செய்து […]Read More

மண் பாத்திரத்தில் சமைத்தால் என்ன நடக்கும்.. ரகசியம் தெரியுமா? வாங்க படிக்கலாம்..

மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி உங்களது ஊட்டச்சத்து குறையாமல் இருப்பதற்கு நீங்கள் சமைக்கக்கூடிய பாத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்று நவீன யுகத்தில்  நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என கூறலாம்.  இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் […]Read More

“உலக அளவில் டாப் கல்வி நிறுவனங்கள்” தமிழகத்தில் மட்டும் 22 நிறுவனங்களா? என்னடா..

“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற வார்த்தைக்கு ஏற்ப உலக அளவில் இருக்கும் பல டாப் கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது என்ற ஆச்சரியமான தகவலை இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உலகின் டாப் பல்கலைக்கழகங்களின் லிஸ்ட்டை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியீட்டு உள்ளது. இதில் உலகில் இருக்கும் டாப் 10 கல்வி நிறுவனங்கள் பற்றியும் ஏனைய கல்வி நிறுவனங்கள் பற்றிய செய்திகள் உள்ளது. […]Read More

உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அவசியம் கடைபிடிக்க வேண்டிய  குறிப்புகள்..!

மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே அவர்களுக்குள் இருக்கும். அப்படி அவர்கள் வெற்றி அடைய என்னென்ன செய்ய வேண்டும். எப்படி செய்தால் வெற்றி அடையலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய முதலில் உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் வெற்றியடைய நீங்கள் அதற்கான இலக்கை வரையறுப்பது முக்கியமான ஒன்றாகும். […]Read More

‘மீன் எண்ணெய்யை நன்மைகள்’.. ஒமேகா த்ரீ யில் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஆரோக்கியத்தோடு இருக்கும் போது தான் மனிதன் எதையும் எளிதில் சமாளிக்க கூடிய சக்தியை பெறுகிறார். அப்படிப்பட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய ஒமேகா 3 மாத்திரையின் நன்மைகள் என்னென்ன, அவற்றை எடுத்துக் கொள்வதால் என்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். நம் உடலுக்கு அதிக அளவு தேவைப்படுகின்ற ஒமேகா-3 மேல் இருந்து மீன் […]Read More

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீர ஜக்கம்மாள்..!” – சிறப்புக்கள் என்ன?

வீரத்தின் தெய்வமாக விளங்கிய ஜக்கம்மா தேவியின் இயற்பெயர் ஜக்காதேவி இது தான் மருவி ஜக்கம்மா தேவி என்று மாறியது. மேலும் இந்த ஜக்கம்மாள் தேவிக்கு சகதேவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் சக என்றால் வாள் என்ற பொருள் தரும். வீரத்தின் வடிவமாக ஜக்கம்மாள் விளங்குகிறார். கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவி குத்துக்கல்லில் அருள் பாலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் இதன் மீது இரண்டு வாள்களை வைத்து வணங்கி இருக்கிறார்கள். ஜக்கம்மா தேவியின் முகத்தை தங்கத்தால் […]Read More

தமிழர்களின் வரலாற்றை பேசும் சங்க கால நூல் அகநானூறு..! – அட எவ்வளவு

தமிழர்களின் சங்க கால நூல்களைப் பற்றி அதிகமாக உங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் Deep Talk தமிழ் நேயர்கள் அனைவருக்கும் தமிழின் சிறப்பு இயல்புகள் மிக நன்றாக தெரிந்து இருக்கும். அந்த வகையில் சங்க கால நூல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பற்றி உங்களுக்கு தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவை இரண்டுமே சங்ககாலத்தை சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று தான். இனி அகநானூறு பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து […]Read More

இந்தியாவை ஆண்ட வினோத ராஜாக்கள்? – என்னென்ன செய்தார்கள் தெரியுமா?

இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டன் அரசு இந்திய வளத்தை சுரண்டி சொத்து செய்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னரே இங்கு நிறைய அரசர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் வித்தியாசமான வினோத பழக்கங்களை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஐந்து வினோதமான ராஜாக்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக நாம் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாமின் பேப்பர் வெயிட் என்ற மன்னரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். […]Read More