• September 8, 2024

Month: October 2023

“ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணில் பறக்க இருக்கும் வீரர்கள்..!” – மாஸான பிளானில்

தற்போது இந்தியா விண்வெளி துறையில் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு இஸ்ரோ பக்கபலமாக இருப்பதோடு பலவிதமான திட்டங்களையும் தீட்டி அதில் வெற்றி நடை போட்டு வருகிறது என கூறலாம். அந்த வகையில் அண்மையில் நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திரன் மூன்று விக்ரம் லாண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பத்திரமாக தரை இறங்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பை உலக நாடுகளின் மத்தியில் பறைசாற்றியது. இதனை அடுத்து ஆதித்யாவை […]Read More

மகாளய அமாவாசை தினத்தில் ஐந்து காய்கறிகளை சாப்பிட்டால் முன்னோர்கள் ஆசி கிடைக்குமா? –

பொதுவாகவே அமாவாசை என்பது மிக முக்கியமான தினமாக இந்துக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது இந்த தினத்தில் அம்மன் வழிபாடு மட்டுமல்லாமல் முன்னோர்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மேலும் அமாவாசை தினங்களில் மூர்க்க தெய்வமாக கருதப்படக் கூடிய சில தெய்வங்களின் சக்தி பன்மடங்கு அதிகரித்து இருக்கும் என்பது இன்று வரை இருக்கும் நம்பிக்கையாக உள்ளது. எனவே இன்று வரை அமாவாசை தினத்தில் தெய்வ வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் அன்று தங்கள் பணிக்கு விடுப்பு கொடுத்து கொடுப்பதை […]Read More

தமிழர் வாழ்க்கையில் நடக்கும் சடங்கு மற்றும் சம்பிரதாயம்..! புதைந்திருப்பது என்ன? 

பிறப்பு முதல் இறப்பு வரை தமிழ் சமுதாய மக்களிடையே எண்ணற்ற  சடங்குகளும், சம்பிரதாயங்களும் காலம் காலமாக கடைபிடிக்க ப்பட்டு வருகின்றனர். இன்னும் இதனை நேர்மையாக கடைபிடிக்கிறவர்களும், மூடநம்பிக்கை என முத்திரை குத்தி கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கு என பல்வேறு சடங்குகள் பிறப்பு முதல் இறப்பு வரை கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அதில் புதைத்து இருக்கும் உண்மைகளை இனி காணலாம். சடங்குகள்  பற்றிய விளக்கம்: சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட  […]Read More

வைகை நாகரிகத்தின் பிரதிபலிப்பு தான் கீழடி..! – வரலாறு பகிரும் உண்மை..

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி கிராமம் மதுரையிலிருந்து தென்கிழக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்றில் 2014 ஆம் ஆண்டு முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவானது அகழ்வாய்வை மேற்கொண்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக செங்கல் கட்ட சுவர், உறை கிணறு, வடிகால்கள் உள்ளிட்ட தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு வரை மூன்று கட்ட […]Read More

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட விஜய் குரல் போலி: எப்படி கண்டுபிடிப்பது?

சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது. இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. […]Read More

உலக சாதனையை எதிர்நோக்கி தளபதி விஜய்யின் லியோ படம்!

தளபதி விஜய்யின் திரைப்படம், எப்போது திரைக்கு வந்தாலும், அந்த திரைப்படத்துடைய ட்ரெய்லர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள, லியோ திரைப்படத்தின் டிரைலர் சன் டிவியின் YouTube தளத்தில் வெளியானது. வெளியாகிய ஒரு சில நிமிடங்களிலேயே, அதாவது 21 நிமிடங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான Likes-களை அது பெற்றுள்ளது. மேலும் பொதுவாக திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடுவதைத் தாண்டி, விஜயின் இந்த ட்ரெய்லரை, சென்னையில் […]Read More

மனிதரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் வரிகள்.. நீங்களும் படிக்கலாம்..

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்‌ எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில  இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் […]Read More

தம்மா துண்டு  களாக்காயில் ஒளிந்து இருக்கும் மருத்துவ குணங்கள்..! – அட எவ்வளவு

விநாயகப் பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் ஒன்றாக இந்த களா காயை கூறலாம். நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் விட இன்றைக்கு கிடைக்கும் களாகாய் எவ்வளவோ பெரிது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட களாக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். புளிப்புச் சுவையுடைய களாக்காயின் பூ, காய், பழம் வேர் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் நிறைந்தது. இது கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும் கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கக்கூடிய […]Read More

“இன்னும் மர்மம் நீங்காத இந்திய கிராமங்கள்..!” – படிக்க படிக்க ஆச்சரியம் ஏற்படும்..

இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களில் பல விதமான மர்மங்கள் இன்றும் தீர்க்க முடியாத அளவு உள்ளது. அப்படி என்னென்ன கிராமங்கள் மர்மமான முறையில் உள்ளது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலாவதாக கர்நாடகாவில் இருக்கும் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சமஸ்கிருதம் பேசும் கிராமமாக திகழ்கிறது. கர்நாடகாவில் அரசு மொழியாக இருக்கும் கன்னடத்தை விடுத்து இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது மர்மமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. […]Read More

எதற்காக மனிதர்களை நாய்கள் கடிக்கிறது? – ஏன் நாய் கடித்தால் உடனே மருத்துவம்

மனிதனின் உற்ற நண்பராக திகழ்வது நாய்கள்  நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணிகள் என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த உலகம் தோன்றி மனித நாகரீகம் தலை தூக்குவதற்கு முன்பாகவே வேட்டையாட நாய்களை மனிதன் பழகி அவற்றோடு ஒன்றாக வாழ்ந்து இருக்கிறான். எனவே மற்ற ஜீவராசிகளை விட நாய்க்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு பண்ணிடும் காலமாக இருந்துள்ளது என கூறலாம். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் நாய்கள் எப்போதாவது மனிதர்களை கடிப்பது எதனால் என்பது பற்றிய விரிவான தகவல்களை […]Read More