• September 8, 2024

Day: October 5, 2023

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட விஜய் குரல் போலி: எப்படி கண்டுபிடிப்பது?

சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது. இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. […]Read More

உலக சாதனையை எதிர்நோக்கி தளபதி விஜய்யின் லியோ படம்!

தளபதி விஜய்யின் திரைப்படம், எப்போது திரைக்கு வந்தாலும், அந்த திரைப்படத்துடைய ட்ரெய்லர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள, லியோ திரைப்படத்தின் டிரைலர் சன் டிவியின் YouTube தளத்தில் வெளியானது. வெளியாகிய ஒரு சில நிமிடங்களிலேயே, அதாவது 21 நிமிடங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான Likes-களை அது பெற்றுள்ளது. மேலும் பொதுவாக திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடுவதைத் தாண்டி, விஜயின் இந்த ட்ரெய்லரை, சென்னையில் […]Read More

மனிதரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் வரிகள்.. நீங்களும் படிக்கலாம்..

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்‌ எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில  இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் […]Read More

தம்மா துண்டு  களாக்காயில் ஒளிந்து இருக்கும் மருத்துவ குணங்கள்..! – அட எவ்வளவு

விநாயகப் பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் ஒன்றாக இந்த களா காயை கூறலாம். நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் விட இன்றைக்கு கிடைக்கும் களாகாய் எவ்வளவோ பெரிது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட களாக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். புளிப்புச் சுவையுடைய களாக்காயின் பூ, காய், பழம் வேர் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் நிறைந்தது. இது கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும் கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கக்கூடிய […]Read More

“இன்னும் மர்மம் நீங்காத இந்திய கிராமங்கள்..!” – படிக்க படிக்க ஆச்சரியம் ஏற்படும்..

இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களில் பல விதமான மர்மங்கள் இன்றும் தீர்க்க முடியாத அளவு உள்ளது. அப்படி என்னென்ன கிராமங்கள் மர்மமான முறையில் உள்ளது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலாவதாக கர்நாடகாவில் இருக்கும் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சமஸ்கிருதம் பேசும் கிராமமாக திகழ்கிறது. கர்நாடகாவில் அரசு மொழியாக இருக்கும் கன்னடத்தை விடுத்து இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது மர்மமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. […]Read More

எதற்காக மனிதர்களை நாய்கள் கடிக்கிறது? – ஏன் நாய் கடித்தால் உடனே மருத்துவம்

மனிதனின் உற்ற நண்பராக திகழ்வது நாய்கள்  நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணிகள் என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த உலகம் தோன்றி மனித நாகரீகம் தலை தூக்குவதற்கு முன்பாகவே வேட்டையாட நாய்களை மனிதன் பழகி அவற்றோடு ஒன்றாக வாழ்ந்து இருக்கிறான். எனவே மற்ற ஜீவராசிகளை விட நாய்க்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு பண்ணிடும் காலமாக இருந்துள்ளது என கூறலாம். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் நாய்கள் எப்போதாவது மனிதர்களை கடிப்பது எதனால் என்பது பற்றிய விரிவான தகவல்களை […]Read More

ராவணன், மண்டோதரியை திருமணம் செய்த கோவில் எது தெரியுமா? அதுவும் தமிழ்நாட்டில் உள்ளதா..

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற ஒரு மகத்தான வாக்கியம் நம்மிடைய காணப்படுவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் உலகிலேயே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட சிவன் கோயில் ஒன்று உண்டு என்றால் அது நம் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சிவன் கோயில் என கூறலாம். இந்தக் கோயில் ஆனது முதல் முதலாக தோன்றிய ஊர் எது? உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் வாசம் செய்த ஸ்தலமாக இருப்பதற்கு காரணம் என்ன? என்பது […]Read More

 எதற்காக இந்த பப்பில் ராப் (Bubble Wrap) கண்டுபிடிக்கப்பட்டது.. விஷயம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

நண்பர்களே தூய தமிழில் இதனை குமிழி உறை என்று கூறலாம். 1957 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ஃபில்டிங் மற்றும் மார்க் சாவான்னெஸ் என்ற பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த bubble wrap. இந்த காகிதத்தை கொண்டு எலக்ட்ரானிக் பொருட்கள் பொதியப்பட்டிருக்கும். மேலும் இதை பொதிவதின் மூலம் உடையாமல் பாதுகாப்பாக எடுத்து வருவதற்கு பேக்கிங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தக் காகிதத்தை தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடைத்து விளையாடுவதை இன்று வரை […]Read More

“சடங்குகள் பற்றிய குறிப்புகள்..! – துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் துண்டுகளில்..

பன்னெடும் காலத்திற்கு முன்பு இருந்த எழுத்து உருவங்கள் தற்போது துருக்கியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எழுத்துருக்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த எழுத்து வடிவங்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆண்டின் முன்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வடக்கு மற்றும் மத்திய துருக்கி பகுதியில் உள்ள போகஸ்காய் ஹட்டுசா பகுதி கிட்ட இந்த களிமண் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியானது கிமு 1600 முதல் கிமு 1200 வரை ஹிட்டைட் பேரரசின் […]Read More