• September 17, 2024

Month: August 2023

என்னது சமண மதம் தான் உருவ வழிபாட்டை கொண்டு வந்ததா? – புதைந்திருக்கும்

பழந்தமிழர்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடு கற்களை மட்டும் தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த தமிழ் மண்ணுக்குள் முதல் முதலாக உருவ வழிபாட்டை கொண்டு வந்து சேர்த்தது சமண மதம் என்று கூறலாம். திறந்த வெளிகளில் இருக்கும் நடு கற்களுக்கு படையல் இட்டு சூலமும், வேளும் குத்தி கிடாய் வெட்டு நடத்தி கடவுளை வணங்கி வந்த தமிழர்களுக்கு உருவ வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் சமண மதத்தவர்களே. இந்த சமண மதத்தவர் அறிமுகப்படுத்திய கடவுளான அய்யனார் தான் முதலில் […]Read More

“சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நீல நண்டு..!” – படாத பாடுபடும் இத்தாலி..

இத்தாலிய கடற்கரைகளில் ஒன்று, இரண்டு மட்டுமே கண்ணில் தென்பட்ட நீல நண்டுகள் தற்போது அதிகரித்து இருப்பதின் காரணத்தால் அங்கு இருந்த நத்தைகளும் கடல்வாழ் உயிரினங்களும் ஏறக்குறைய மறைந்து விட்ட நிலையில் உள்ளது என்று கூறலாம். மேற்கு அட்லாண்டிக்கில் இருந்து தோன்றிய இந்த நீல நண்டுகள் தற்போது இத்தாலியின் பல பகுதிகளில் பரவி, உள்ளூரில் இருந்த மீன் இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது. இப்போது இந்த நீல நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து […]Read More

“இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகள்..!”- அவிழ்க்க முடியாத மர்மம்..

சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதுமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான தருணத்தை இஸ்ரோ ஏற்படுத்திவிட்டது என்ற பெருமை ஒவ்வொரு இந்தியர்களின் மனதில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த வெற்றியை நாம் கொண்டாடி வருகின்ற வேளையில், இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகளை பற்றி.. அந்த தற்கொலைகள் எதற்காக? யாருக்காக? நடந்தது? என்ற மர்ம முடிச்சு இன்று வரை அவிழ்க்கப்பட முடியாமல் உள்ளது. யார்? யார் ?அந்த விஞ்ஞானிகள் .. என்பது பற்றிய விவரமான தரவுகளையும், […]Read More

“பிரக்யான் நிலவில் கண்டுபிடித்த ஜாக்பாட் தனிமங்கள்..!”- விழி பிதுங்கும் உலக நாடுகள்..

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நிலவில் எந்த ஒரு நாடுகளும் இறங்காத தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் ரோவர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனை அடுத்து இதில் இருந்த பிரக்யான் தனது வேலையை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டது. பிரக்யான் அளித்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது உலக நாடுகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளி வந்த பிரக்யான் தற்போது […]Read More

“வாய் பிளக்க வைக்கும் மாம்பழத்தின் விலை 1,62,000 ரூபாய்..!” – அட ஒரு

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட மாம்பழத்தை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்பு தளர்ச்சிகள் நீங்கி உடல் வலிமையாகும். உடலின் முக்கிய உறுப்புக்களாக இருக்கும் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை மாம்பழத்திற்கு உண்டு. இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து […]Read More

“பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர்..!” இனி வேண்டவே வேண்டாம்..

இன்று பெரும்பாலானோர் பயணத்தின் போதும், ஏன் வீடுகளில் கூட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கக்கூடிய தண்ணீரை தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற விளைவுகள் ஏற்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்பட்டிருக்கும், தண்ணீரை நீங்கள் வெயிலில் வைத்திருக்கும் போது பிளாஸ்டிக் பாட்டில் இருக்கக்கூடிய மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் வேதிப் பொருளானது தண்ணீரில் கலந்து வெளியேறும். இந்த நீரை நீங்கள் பருகுவதின் மூலம் உங்கள் […]Read More

மனச்சோர்வாக இருக்கும் சமயத்தில் அதை கடக்க சில எளிய வழிகள்..

இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு மனச்சோர்வு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இந்த மனச்சோர்வுக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து பார்க்கும்போது பலவிதமான சூழ்நிலைகளை நாம் கூற முடியும். குறிப்பாக நீங்கள் தனிமையாக இருக்கக்கூடிய காலகட்டத்தில், அதிக அளவு பணிகளை செய்யக்கூடிய நேரத்தில், உறவுகளோடு இருக்கக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு இது போன்ற மன சோர்வுகள் ஏற்படலாம். மன சோர்வில் இருந்து வெளிவந்து இயல்பாக நீங்கள் இருக்க பல வழிகள் உள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது […]Read More

“இரண்டு முறை காணாமல் போகும் சிவன் கோயில்..!- அப்படி என்ன நடக்கிறது..

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு பழமையான அதிசய கோவில் பற்றியும் அங்கு நடக்கும் வினோதமான நிகழ்வை பற்றியும் தான், இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம். அட.. அப்படி என்ன அந்த கோயிலில் மர்மமான முறையில் நடக்கும் அதிசயம் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த சிவன் கோயில் ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போய்விடுமாம். இது எப்படி சாத்தியம் உண்மையா? என்று நீங்கள் உள்ளுக்குள் யூகிக்கலாம். உண்மையிலேயே அந்த அதிசய கோயில் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் […]Read More

 “முப்பெரும் மன்னர்களால் ஆளப்பட்ட மயிலாடுதுறை..!” – வரலாறு உண்மைகள்..

இன்றைய மயிலாடுதுறை அன்று மாயவரம் என்று அழைக்கப்பட்டது இந்த மாவட்டமானது மிகவும் வளமான கலாச்சாரத்தோடு திகழ்ந்த ஊர் இங்கு அழகிய கோயில்கள் அதிக அளவு காணப்படுகிறது. மயில் ஆடுதுறை என்று பெயர் வர காரணம் எந்த நகரில் மயில்கள் அதிக அளவு இருந்ததால் மயில்கள் ஆடும் துறை என்று கூறப்பட்டது பின்னாளில் மயிலாடுதுறை என்று மருவியது. இந்த ஊரை ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். வணிகத்திற்கு முக்கியமான மையமாக மயிலாடுதுறை எனும் […]Read More

யார் இந்த யட்சினி? மாந்திரீகம் தரும் விரிவான விளக்கம்..

யட்சினி என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கேள்விப்பட்டிருந்தால் இந்த யட்சினி தேவதைகளோடு எப்படி பேசுவது என்ற வித்தை உங்களுக்கு தெரியுமா? உதாரணமாக நீங்கள் உங்கள் ஜாதகத்தை பார்ப்பதற்காக ஒரு சில ஜோதிடங்களை சந்திக்க கூடிய வேளையில் நீங்கள் அவர்கள் முன் அமர்ந்து கொண்டாலே, உங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை அக்கு வேறு ஆணிவேராக தரம் பிரித்து சொல்வார்கள். எப்படி இப்படி சொல்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு கட்டாயம் வந்தே தீரும். இதற்கு காரணம் இவர்கள் யட்சினைகளை […]Read More