• September 17, 2024

Day: August 26, 2023

டைனோசர் இந்தியாவிலும் வாழ்ந்ததா?- புதிய ஆதாரம் என்ன சொல்கிறது..

இந்த உலகில் மிகப்பெரிய நில வாழ் இனமான டைனோசர் பற்றி திரைப்படங்களில் பார்த்திருப்பதோடு, அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை ஒரு நிமிடம் பயமுறுத்தக்கூடிய வகையில் இருக்கும். நல்ல வேளை அந்த உயிரினங்கள் இருந்த காலகட்டத்தில் நாம் இல்லை என்பதால் தப்பிப்பிழைத்தோம் என்று மனதில் பலரும் பேசிக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த டைனோசர்கள் இந்தியாவிலும் இருந்துள்ளது என்று சொன்னால் உங்களுக்கு மேலும் ஆச்சரியம் வரும். இந்த டைனோசர் பற்றிய அதீத புரிதல் உங்களுக்கு ஜுராசிக் பார்க் படம் […]Read More

கோரக்கர் சித்தரின் ஸ்பெஷல் என்ன? இவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..

குப்பை மேட்டில் போட்ட விபூதியின் மகத்துவத்தால் 9 வயது நிறைந்த சிறுவனாக, அதுவும் தியானம் செய்த கோலத்தில் இருந்த சிறுவன் தான் கோரக்கர். கோரக்கர் மூலிகையால் பிறந்த இவரைத்தான் கோரக்க சித்தர் என்று அழைப்பதாக ஆரூரை கலம்பகம் என்ற பழைய தமிழ் நூல் கூறுகிறது. மேலும் தனது தாயே தன்னை குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், இத்துணை நாட்களில் அந்த குப்பைத் தொட்டியில் நாற்றத்தோடு கஷ்டப்பட்ட நான் இனி உன்னோடு இருக்க இஷ்டமில்லை. எனவே இந்த சித்தருடன் […]Read More

அஸ்வமேத யாகத்தில் பலியிடப்பட்ட குதிரை படைவீரர்களுக்கு புலால் உணவானதா? – உண்மை என்ன?

பண்டைய காலத்தில் வாழ்ந்து வந்த நமது முன்னோர்கள் புலால் உணவை உண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை வைக்கும் போது இந்து மதத்தை கடைபிடித்து வந்த அவர்கள் புலால் உணவு எடுத்துக் கொண்டு இருப்பதைப் பற்றியும், அதற்காக அவர்கள் கடவுளுக்கு பலியிட்ட விலங்குகளை தான் அப்படி உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. சில சம்பிரதாய சடங்குகளுக்காக இந்து மதத்தில் விலங்குகளை பலியிடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வாகவே உள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட […]Read More

 “வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி..!” – யார் இந்த செம்பியன் மாதேவி வரலாறு

சோழர் குல பெண்ணான செம்பியன் மாதேவி சோழ மன்னர் கண்டராதித்தரின் பட்டத்து ராணியாக திகழ்ந்திருக்கிறார். மேலும் இவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவர் குடும்பத்தில் பிறந்தவர். பராந்தக சோழர் இவருடைய தந்தை மிகச் சிறந்த சிவபக்தராக விளங்கி இருக்கிறார். இவரது கணவரான கண்டராதித்தர் இறப்புக்குப் பிறகு இவருடைய பிள்ளைக்கு அரியணையில் உரிமை இருந்த போதும், தனது மகன் மிக சிறிய சிறுவனாக இருந்த காரணத்தினால் தாயார் ஆகிய இவர் அவருக்கு வழி காட்டியாக இருந்து ஆட்சி […]Read More

யார் இந்த அஸ்வினி குமாரர்கள்? – இவர்களுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்?

ரிக் வேதத்தில் பகிரப்பட்டு இருக்கக்கூடிய இந்த அஸ்வினி தேவர்கள் அற்புதமான சக்தியை படைத்தவர்கள். இரட்டையர்களான இவர்கள் நோயாளிகளை குணப்படுத்துவதில் வல்லவர்களாக திகழ்ந்தது உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேவர்கள் ஏதேனும் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் அவர்களை விரைந்து சென்றும் காப்பாற்றக்கூடிய அற்புத ஆற்றல்மிக்க அஸ்வினி தேவர்கள் யார்? அவர்களுக்கும் சூரிய பகவானுக்கும் என்ன சம்பந்தம் என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். இந்த அஸ்வினி தேவர்களில் ஒருவரின் பெயர் “நாசத்ய” அதாவது அசத்தியம் இல்லாத நபர் என்று […]Read More

 “அமெரிக்க ஆதிக்கத்தை அடியோடு அழிக்க பிரிக்ஸ்..!” – ரஷ்யா, இந்தியா, சீனா சாதிக்குமா?

உலகில் மிகப்பெரிய வல்லரசாக திகழக்கூடிய அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடியோடு கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பாக பிரிக்ஸ் விளங்குமா? என்பது இனிவரும் காலங்களில் நமக்கு எளிதில் விளங்கிவிடும். தற்போது ஐந்து நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் இருக்கிறது. இதனை அடுத்து மேலும் 11 நாடுகள் இந்த அமைப்பில் இணைய உள்ளதால், அமெரிக்காவின் ஆட்டத்தை ஒடுக்க ரஷ்யா, சீனா, இந்தியா வகுத்திருக்கும் வியூகமாக இது இருக்குமா? என்ற கேள்வியை பலரின் முன் பிரிக்ஸ் ஏற்படுத்தி விட்டது. பிரிக்ஸ் இந்த விரிவாக்கமானது வரலாற்று சிறப்புமிக்கதாக […]Read More

“சலாலா.. ஓமன் நாட்டில் இருக்கும் அதிசய பாலைவனம்..!”- மூன்று மாதம் மட்டுமே நிகழும்

பொருளாதாரத் துறையில் மிகவும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்திருக்க கூடிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஓமன் நாடு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. மத்திய கிழக்கு பகுதிகளில் இருக்கக்கூடிய நாடுகள் பெரும்பாலும் பாலைவனமாக தான் உள்ளது. இந்தப் பாலைவனப் பகுதியில் உலகின் வேறு எந்த பகுதியிலும் நிகழாத அதிசயம் ஒன்று முதல் மூன்று மாதங்கள் மட்டுமே நிகழ்த்தி வருகிறது. இந்த நிகழ்வின் மர்மம் என்ன என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி […]Read More