• September 17, 2024

Day: August 5, 2023

“குழந்தைகளுக்கு காது குத்துவது சடங்கல்ல..!” – காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள்..

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்தும் சடங்கை பொதுவாக அனைவரும் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு காது குத்துவது அழகினைக் கூட்டுவதற்கு மட்டுமல்ல. குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய விஷயம் இதில் பொதிந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது. காலம் காலமாக தொடரக்கூடிய இந்த வழக்கம் குழந்தை பிறந்து மூன்று மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் அல்லது மூன்று ஐந்து என ஒற்றை இலக்கங்களில் வருடங்கள் வரும் போது அவரவர் வழக்கப்படி காது குத்தும் சம்பிரதாயம் உள்ளது. குழந்தைகளுக்கு காது குத்தும் […]Read More

தமிழர்களின் சம்பிரதாயங்களில் மா இலை? – எதற்காக இந்த சூட்சுமம்..

தமிழர்கள் பெரும்பாலும் சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலிய மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படும் மாவிலைத் தோரணங்கள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் கலாசார மிக்க அலங்காரப் பொருளாகவும் இந்த மாவிலை திகழ்கிறது.  பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகளை இட்டு அதன் மீது தேங்காயை வைத்து தான் சுவாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் கலசத்தில் உள்ள புனித நீர் பக்தர்கள் மீதும் மா விலை கொண்டு தெளிக்கப்படும். இப்படி […]Read More

“அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட திகில் போட்டி..!” – இதுவும் மலை பாம்போடு..

அமெரிக்காவில் இருக்கும் பிளாரிடா மாகாணத்தில் ஆண்டுதோறும் மலை பாம்பு வேட்டை போட்டி நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த போட்டியில் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மலை பாம்புகளை பிடித்து பல்வேறு சாகசங்களை செய்வார்கள். இயல்பாகவே பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்ற சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. இந்த வகையில் பார்க்கும்போதே மனிதனுள் பயத்தை கிளப்பி விடக் கூடிய அச்சத்தை போக்குவதற்காக தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று கூறலாம். இந்த போட்டியில் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல […]Read More

“பொம்மன்-பெள்ளியை பாராட்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!” – யார் இந்த தம்பதிகள்..!

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டை நோக்கி இன்று வருகிறார். இவர் டெல்லியில் இருந்து மைசூர் சென்று விட்டு, பின் அங்கிருந்து தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி முதுமலையில் இருக்கும் யானைகள் முகாமில் ஆஸ்கார் விருதை வென்று குவித்த ஆவணப்படத்தின் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்ட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி […]Read More

கொள்ளை அடிக்க முடியாத ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி சிலை..! – திருடர்களுக்கு தண்ணி

ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி ஆலயம் ஆனது கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் முழக்குன்னு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலானது 108 துர்கை கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலின் சிறப்பம்சமே இந்த கோயிலை பரசுராமர் நிறுவினார் என்பது தான். இந்த அம்மனின் பெயருக்கு காரணம் மிருதங்கம் என்ற இசை கருவியின் வடிவத்தில் அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது. மேலும் இந்த துர்க்கை அம்மன் கேரள வர்மா பழசி ராஜாவின் குலதெய்வமாக திகழ்கிறார். போருக்கு செல்வதற்கு முன் […]Read More

“யார் இந்த தேவரடியார்கள்..!” அவர்களின் வரலாறு என்ன? – ஓர் அலசல்..

தேவரடியார்கள் இந்த வார்த்தை இதுவரை நீங்கள் கேட்டிராத வார்த்தைகளில் ஒன்றாக கூட இருக்கலாம். தமிழில் அடியார் என்ற சொல் நமக்குள் ஒரு மரியாதையை தரக்கூடிய சொல்லாகவும், ஆண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சொல் ஆகவும் இருக்கும். அதனால் தான் நாம் சிவனடியார்கள், பெருமாள் அடியார்கள் என்று அழைக்கிறோம். அது சரி அப்படி என்றால் இந்த தேவரடியார் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். […]Read More

பலராமரின் கரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து வேறொரு பெண்ணுக்கு மாற்றப்பட்டதா? பாகவதம் தரும்

இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பல அற்புதமான விஷயங்கள் வெளிவருவதோடு, நமது முன்னோர்களுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இத்தகைய அறிவியல் சாதனைகளை எப்படி செய்தார்கள் என்று நம்மை வியக்க வைக்கிறது. அந்த வரிசையில் இன்று பலராமன் உடைய கருவானது தன் தாய் வயிற்றிலிருந்து வேறொரு பெண்ணின் வயிற்றுக்கு மாற்றப்பட்ட விஷயத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். […]Read More