• March 27, 2024

நீயே என் ஓளடதம்!!

 நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;
வேதாளம் போல முதுகு மீதேறி
அமர்ந்து இறங்க மறுக்கின்றன…!


நினைத்து புதைந்து போவதற்கான
வரிகள்… எழுத்துக்கள்,
லாவகமாக விரல் பிடித்து
மார்பின் மீது தலை வைத்து
சில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!!

கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,
வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;
யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;
எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனே
தூரத்தில் நின்று ஏன்
வேடிக்கை பார்க்கிறாய்…?!


என் பொழுதுகளை
ஆக்கிரமித்துக் கொள்ளும்,
மறந்திருந்த…மறைந்திருந்த
உணர்வின் நினைவுகளை
தட்டி எழுப்பும்… நீ
நீயே என் ஓளடதம்!!!