• June 2, 2023

Tags :kathal kavithai

கவிதைகள்

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More

கவிதைகள்

மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,காற்றினில் கரையாமல்…மின்சாரமாய் தாக்கும்,மின்னலில் மிரளாமல்…இருதயமுறைய இடிக்கும்,இடியினில் இடியாமல்…உயிரே…உறவாய்…உன்னைக் கண்டேனடி!மழைத்துளிகளின் நடுவே!! சனோஃபர் எழுத்தாளர்Read More

கவிதைகள்

வா இப்படி வாழலாம்!

கல்லையே கரைக்கும் நமதுபேச்சால் கரைப்போம்,உன் தாய், தந்தை, அண்ணனை! காத்திருப்போம்கல்யாணம் செய்வோம்,கண்ணாடி வீடு கட்டிஅண்ணாந்து நிலா பார்ப்போம்! நாம் நிலா மூவர் மட்டும்தினம்தோறும் விழித்திருப்போம்! பைக்கில் பயணம் செய்துதாஜ்மஹாலில் இளைப்பாறுவோம்! விடுமுறைக்கு சுற்றுலா செல்வார்கள்,நாம் உலகம் சுற்றிவிட்டுவிடுமுறைக்கு மட்டும் வீடு வருவோம்! தப்பில்லாமல் சமையல் செய்ய,சில மாதம் எடுத்துக்கொள்வோம்! கதவு இல்லா வாசல் வைத்து,வந்தவர்க்கெல்லாம் உணவளிப்போம்!வாடி நிற்கும் அனைவருக்கும்தேடிச்சென்று உதவி செய்வோம்!! காலையில் இயற்கையோடு ஓட்டம் ஓடுவோம்,மாலையில் கால்பந்துஆடுவோம்! மழை பெய்தால் நனைந்துகொண்டேகாகிதக் கப்பல் விடுவோம்!கை கோர்த்து […]Read More

கவிதைகள்

விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!! உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!கனவே நீ சூரியனா!உன் ஒளிக்காக தவிக்கின்றகண்மணி நானும் தாமரையா!! நம்பிக்கை ஒன்றைத் தவிரஎன்னிடமும் ஒன்றும் இல்லை..என் கையில் சேர்வாயோஎன்னைத் தாங்கிச் செல்வாய்யோ!! – இரா. கார்த்திகாRead More

கவிதைகள்

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More

கவிதைகள்

துள்ளிக்குதித்த மனமே!

இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை கண்டபின் மானைப் போலஎன் மனம் துள்ளிக் குதித்து ஓடியது! – இரா. கார்த்திகாRead More

கவிதைகள்

அழியாத காதல்

மொழி பேசாத காலத்திலேமொழி பேசிய காதலடி! நிறம் அறிந்த காலத்திலேஇனம் அறியாத காதலடி! போர் கொண்ட காலத்திலேபகை நாட்டவர் போற்றிய காதலடி! விழியற்று போனாலும்மனம் பார்க்கும் காதலடி! செவியற்ற நிலையிலும்இசை கேட்கும் காதலடி! நீ சொல்ல மறுத்தாலும்உன் விழி சொல்லும் காதலடி! Sarath Kumar WriterRead More

கவிதைகள்

காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

கை அருகில் நீஇருந்தும் இல்லாமல் நான்…!!ஏதுவும் பிடிப்பதில்லைஅழைத்தாலும் செவிமடுக்கவில்லை;சொல்வதற்கு ஏதுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் சுவாசக் காற்றில்ஊசலாடும் இதயம்…! ‘நீதான்’ வேண்டும்அடம்பிடிக்கும் மனது…!கொடுக்கவியலா தூரத்தில் நீ…!ஸ்பரிசம் உணரா தவிப்பில் நான்…!!பெரிதாக ஒன்றுமில்லை..சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! கொடியாய் படர்கிறாய்மலராய் மணக்கிறாய்ஆலகால விஷமானவனே…!என் காதலில் குரூரம்… நீசொல்வதற்கு ஏதுமில்லை..!!சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் அருகாமைவேண்டி தவமிருக்கும் மனது;சாத்தியமாக்க வந்து சேர்….!இணைந்து மகிழப்போகும்வாழ்வின் நினைவுகளில்,வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!!பெரிதாக ஒன்றுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!Read More

கவிதைகள்

வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்.. – இரா.கார்த்திக்காRead More

கவிதைகள்

புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!! கனவில் வருகின்ற கடவுளாய் நீ!உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!! வானில் ஒளிரும் திங்களாய் நீ!உன்னை தீண்டும் மேகமாய் நான்!! நீ என் உயிரில் நிறைந்திருக்ககாற்றும் மழையும் கதை சொல்லபுத்தனும் பித்தனாய் மாறினேனே!Read More